tamilni 34 scaled
சினிமாசெய்திகள்

முதல்வரை முடிவு செய்ய நீ யார்? நடிகர் அனுமோகனிடம் கேள்வி எழுப்பிய போதை நபரால் பரபரப்பு

Share

முதல்வரை முடிவு செய்ய நீ யார்? நடிகர் அனுமோகனிடம் கேள்வி எழுப்பிய போதை நபரால் பரபரப்பு

அதிமுக தேர்தல் பரப்புரையின் போது நடிகர் அனுமோகனிடன் போதையில் இருந்த நபர் எழுப்பிய கேள்வியால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவிற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதில் தமிழகத்திற்கான தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கிறது. இதனால், அதிமுக, திமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர்களான திரைப்பட இயக்குனர் ஆர். வி. உதயகுமார், நடிகர் அனுமோகன், நடிகர் ரங்கநாதன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அவர்கள் பிரச்சாரத்தில் பேசுகையில், “தமிழகத்தில் அனைத்து வரி உயர்வுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே காரணம். நீட் தேர்வுக்கு விலக்கு தருவதாக கூறி ஒவ்வொரு முறையும் வாக்குறுதி தருகிறார்கள். ஆனால், பல குடும்பங்கள் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்” என்றனர்.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஒருவரே தமிழகத்தின் முதலமைச்சராக இருக்க தகுதி வாய்ந்தவர் என நடிகர் அனுமோகன் பேசினார். அப்போது, போதையில் இருந்த நபர் ஒருவர் என்னுடைய முதலமைச்சரை தேர்வு செய்ய நீ யார் என்று அனுமோகனிடம் கேள்வி எழுப்பினார்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட அதிமுக கட்சித் தொண்டர்கள் கூட்டத்திலிருந்து குடிமகனை அப்புறப்படுத்தினர். இதன்பின்னர், அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க தொடங்கினர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...