tamilni 34 scaled
சினிமாசெய்திகள்

முதல்வரை முடிவு செய்ய நீ யார்? நடிகர் அனுமோகனிடம் கேள்வி எழுப்பிய போதை நபரால் பரபரப்பு

Share

முதல்வரை முடிவு செய்ய நீ யார்? நடிகர் அனுமோகனிடம் கேள்வி எழுப்பிய போதை நபரால் பரபரப்பு

அதிமுக தேர்தல் பரப்புரையின் போது நடிகர் அனுமோகனிடன் போதையில் இருந்த நபர் எழுப்பிய கேள்வியால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவிற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதில் தமிழகத்திற்கான தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கிறது. இதனால், அதிமுக, திமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர்களான திரைப்பட இயக்குனர் ஆர். வி. உதயகுமார், நடிகர் அனுமோகன், நடிகர் ரங்கநாதன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அவர்கள் பிரச்சாரத்தில் பேசுகையில், “தமிழகத்தில் அனைத்து வரி உயர்வுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே காரணம். நீட் தேர்வுக்கு விலக்கு தருவதாக கூறி ஒவ்வொரு முறையும் வாக்குறுதி தருகிறார்கள். ஆனால், பல குடும்பங்கள் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்” என்றனர்.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஒருவரே தமிழகத்தின் முதலமைச்சராக இருக்க தகுதி வாய்ந்தவர் என நடிகர் அனுமோகன் பேசினார். அப்போது, போதையில் இருந்த நபர் ஒருவர் என்னுடைய முதலமைச்சரை தேர்வு செய்ய நீ யார் என்று அனுமோகனிடம் கேள்வி எழுப்பினார்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட அதிமுக கட்சித் தொண்டர்கள் கூட்டத்திலிருந்து குடிமகனை அப்புறப்படுத்தினர். இதன்பின்னர், அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க தொடங்கினர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...