1748708635 thai 6 683c47f80cae8
சினிமாசெய்திகள்

மரணத்தோடு மோதிய உலகழகி..! ஓபல் சுசாட்டாவின் கசப்பான வாழ்க்கைச் சம்பவங்கள்…

Share

உலக அழகி பட்டம் வெல்பவர்களின் வாழ்வு வெற்றிப்படியாகத் தொடங்கும் எனப் பலர் நினைப்பார்கள். ஆனால் சிலருக்கு அந்த வெற்றி ஒரு போராட்டத்தின் முடிவாகும். அப்படிப்பட்டவர் தான் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா. தற்போது 2025ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அந்த வெற்றிக்குப் பின்னால் மரணத்தை அருகில் பார்த்த அனுபவங்களும், அழிவைக் கடந்து மீண்டெழுந்த உறுதியும் உள்ளன என்பதை பெருமையாக தற்பொழுது கூறியுள்ளார்.

2025ம் ஆண்டு Miss World பட்டத்தை வென்றவர் ஓபல் சுசாட்டா. இதனால், தாய்லாந்து, அழகுப் போட்டிகளில் பெருமைப்படும் நாடாக மாறியது. ஒரு பெண்மணி, தனது வாழ்வில் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களை ஜெயித்து, உலகமே பாராட்டும் அழகி ஆவதற்கான சான்றாகவே, இப்போது உலகம் முழுவதும் ஓபலின் பெயர் பேசப்படுகின்றது.

அதிகமானோருக்கு 16வது வயது என்பது கனவுகள் முளைக்கும் பருவம். ஆனால் ஓபலுக்கு அந்த வயதில் வந்தது மார்பக புற்றுநோய். திடீரென அடையாளம் கண்ட அந்த நோய், அவரது வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப் போட்டது.

முதன்மை நிலை புற்றுநோய் என மருத்துவர்கள் உறுதி செய்ததும், ஓபல் ஒரு நொடியும் தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொண்டார். கீமோதெரபி, மனதளவிலான ஆழ்ந்த பாதிப்பு ஆகியவை அவளுக்கு எதிரிகளாக இருந்தாலும், அவற்றை சிறப்பாக வெற்றி கொண்டார்.

ஓபல் சுசாட்டா, தாய்லாந்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தாய் மொழியுடன் சைனீஸ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளையும் பேசக் கூடியவர். இது அவரை உலக அழகி போட்டிகளில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தியது.

புற்றுநோயைக் கடந்து வாழ்வில் மீண்ட ஓபல், அதை மறந்துவிடாது அந்தப் நோய்க்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொண்டார். “மார்பக புற்றுநோய் ஒரு பெண்குலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே ஒரு எதிரி. அதை உடனே கண்டுபிடித்தால் நம்மால் வெல்ல முடியும்” என்கிறார் ஓபல்.

ஓபலின் வெற்றி, தாய்லாந்துக்கு உலக அளவில் பெருமை சேர்த்துள்ளது. அவரை மிகுந்த வெறுப்பிற்குள்ளாகிய ஒரு நோயையும், எதிர்மறையான பார்வைகளையும் மீறி, ஒரு நாட்டை உலக மேடையில் நிமிர்த்தியுள்ளார். தாய்லாந்து அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் மக்களும் இப்போது அவரை தேசிய ரத்தினமாக கருதுகின்றனர்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...