24 664a2cc133b16
சினிமாசெய்திகள்

படப்பிடிப்பு துவங்கியவுடன் வசூல் வேட்டை.. OTT மட்டுமே இத்தனை கோடிகளுக்கு விற்றதா

Share

படப்பிடிப்பு துவங்கியவுடன் வசூல் வேட்டை.. OTT மட்டுமே இத்தனை கோடிகளுக்கு விற்றதா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் விடாமுயற்சி படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில், குட் பேட் அக்லீ படத்தின் படப்பிடிப்பை அஜித் துவங்கிவிட்டார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தனர். சர்ச்சைக்குள்ளான இந்த போஸ்டர் 24 மணி நேரத்தில் 41 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு மாபெரும் சாதனையும் படைத்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித் ரூ. 165 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் சண்டை காட்சிகளுடன் குட் பேட் அக்லீ படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், அப்படத்தின் OTT உரிமை குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை பிரபல OTT நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ரூ. 95 கோடி கொடுத்து வாங்கியுள்ளாராம்.

இதன்மூலம் படத்தின் பட்ஜெட்டில் கால்பங்கு படப்பிடிப்பின் போதே குட் பேட் அக்லீ திரைப்படம் வசூல் செய்துவிட்டது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share
தொடர்புடையது
4 19
உலகம்செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை! புடினின் அறிவிப்புக்காக காத்திருக்கும் இஸ்தான்புல்

இஸ்தான்புல்லில் நாளை நடைபெறவிருக்கும் ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்...

3 20
உலகம்செய்திகள்

அமெரிக்காவிடமிருந்து நூற்றுக்கணக்கான விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்வதற்காக கட்டார் ஒப்பந்தம் செய்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)...

2 28
உலகம்செய்திகள்

நீண்டகால எதிரிகளை ஒன்றினைய வலியுறுத்தும் அமெரிக்கா

இஸ்லாமியவாத தலைமையிலான அரசாங்கத்தின் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாக அமெரிக்கா திடீரென அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு...

1 18
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி அநுர

உள்ளுராட்சி மன்றங்களில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை...