23 64ba5e8dd69dd
சினிமாசெய்திகள்

திருமணத்திற்கு பிறகு அந்த விஷயத்திற்காக நான் மிகவும் கவலைப்பட்டேன்- மஞ்சிமா மோகன் வருத்தம்

Share

திருமணத்திற்கு பிறகு அந்த விஷயத்திற்காக நான் மிகவும் கவலைப்பட்டேன்- மஞ்சிமா மோகன் வருத்தம்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்து வந்தவர் தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் நாயகி அவதாரம் எடுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.

பின் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், FIR என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார், தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார்.

கடைசியாக 2023ம் ஆண்டு Boo என்ற படத்தில் நடித்திருக்கிறார், அதன்பிறகு எந்த படங்களும் நடிக்கவில்லை.

இவர் தமிழ் சினிமாவின் இளம் நாயகன் கௌதம் கார்த்திக்கை காதலித்து வர இருவரும் கடந்த 2022ம் ஆண்டு சிம்பிளான முறையில் திருமணம் செய்துகொண்டார்கள்.

அண்மையில் ஒரு பேட்டியில், திருமணத்திற்கு முன்பே நான் கர்ப்பமாக இருந்ததாகவும், எனது மாமனாருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என பொய்யான தகவல்கள் பரவின.

இந்த வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது என்பது மட்டும் உண்மை, பெரும்பாலானோர் எங்கள் திருமணம் குறித்து மகிழ்ச்சியடைந்தனர், சிலர் ஏளனம் செய்தனர்.

திருமணத்துக்கு முன்பே சில கருத்துக்களை எதிர்கொண்டேன், ஆனால் அது என்னை ஒருபோதும் பாதிக்கவில்லை. ஆனால் திருமணத்துக்குப் பின் இதுகுறித்து கவலைப்பட்டிருக்கிறேன், இதுபோன்ற கமெண்டுகளை படித்து ஏன் வருத்தப்படுகிறார் என கவுதம் கேட்பார்.

நான் அவருக்கு சரியான ஜோடி இல்லை என்ற விமர்சனங்கள் பார்க்கும் போது வலிக்கும், அப்போது நான் தோல்வியடைந்தவளாக உணர்வேன். ஆனால் கவுதம் எனக்கு எப்போதும் துணையாக இருந்திருக்கிறார் என பேசியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...