23 64ba5e8dd69dd
சினிமாசெய்திகள்

திருமணத்திற்கு பிறகு அந்த விஷயத்திற்காக நான் மிகவும் கவலைப்பட்டேன்- மஞ்சிமா மோகன் வருத்தம்

Share

திருமணத்திற்கு பிறகு அந்த விஷயத்திற்காக நான் மிகவும் கவலைப்பட்டேன்- மஞ்சிமா மோகன் வருத்தம்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்து வந்தவர் தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் நாயகி அவதாரம் எடுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.

பின் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், FIR என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார், தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார்.

கடைசியாக 2023ம் ஆண்டு Boo என்ற படத்தில் நடித்திருக்கிறார், அதன்பிறகு எந்த படங்களும் நடிக்கவில்லை.

இவர் தமிழ் சினிமாவின் இளம் நாயகன் கௌதம் கார்த்திக்கை காதலித்து வர இருவரும் கடந்த 2022ம் ஆண்டு சிம்பிளான முறையில் திருமணம் செய்துகொண்டார்கள்.

அண்மையில் ஒரு பேட்டியில், திருமணத்திற்கு முன்பே நான் கர்ப்பமாக இருந்ததாகவும், எனது மாமனாருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என பொய்யான தகவல்கள் பரவின.

இந்த வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது என்பது மட்டும் உண்மை, பெரும்பாலானோர் எங்கள் திருமணம் குறித்து மகிழ்ச்சியடைந்தனர், சிலர் ஏளனம் செய்தனர்.

திருமணத்துக்கு முன்பே சில கருத்துக்களை எதிர்கொண்டேன், ஆனால் அது என்னை ஒருபோதும் பாதிக்கவில்லை. ஆனால் திருமணத்துக்குப் பின் இதுகுறித்து கவலைப்பட்டிருக்கிறேன், இதுபோன்ற கமெண்டுகளை படித்து ஏன் வருத்தப்படுகிறார் என கவுதம் கேட்பார்.

நான் அவருக்கு சரியான ஜோடி இல்லை என்ற விமர்சனங்கள் பார்க்கும் போது வலிக்கும், அப்போது நான் தோல்வியடைந்தவளாக உணர்வேன். ஆனால் கவுதம் எனக்கு எப்போதும் துணையாக இருந்திருக்கிறார் என பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...