சினிமாசெய்திகள்

திருமணத்திற்கு பிறகு அந்த விஷயத்திற்காக நான் மிகவும் கவலைப்பட்டேன்- மஞ்சிமா மோகன் வருத்தம்

23 64ba5e8dd69dd
Share

திருமணத்திற்கு பிறகு அந்த விஷயத்திற்காக நான் மிகவும் கவலைப்பட்டேன்- மஞ்சிமா மோகன் வருத்தம்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்து வந்தவர் தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் நாயகி அவதாரம் எடுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.

பின் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், FIR என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார், தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார்.

கடைசியாக 2023ம் ஆண்டு Boo என்ற படத்தில் நடித்திருக்கிறார், அதன்பிறகு எந்த படங்களும் நடிக்கவில்லை.

இவர் தமிழ் சினிமாவின் இளம் நாயகன் கௌதம் கார்த்திக்கை காதலித்து வர இருவரும் கடந்த 2022ம் ஆண்டு சிம்பிளான முறையில் திருமணம் செய்துகொண்டார்கள்.

அண்மையில் ஒரு பேட்டியில், திருமணத்திற்கு முன்பே நான் கர்ப்பமாக இருந்ததாகவும், எனது மாமனாருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என பொய்யான தகவல்கள் பரவின.

இந்த வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது என்பது மட்டும் உண்மை, பெரும்பாலானோர் எங்கள் திருமணம் குறித்து மகிழ்ச்சியடைந்தனர், சிலர் ஏளனம் செய்தனர்.

திருமணத்துக்கு முன்பே சில கருத்துக்களை எதிர்கொண்டேன், ஆனால் அது என்னை ஒருபோதும் பாதிக்கவில்லை. ஆனால் திருமணத்துக்குப் பின் இதுகுறித்து கவலைப்பட்டிருக்கிறேன், இதுபோன்ற கமெண்டுகளை படித்து ஏன் வருத்தப்படுகிறார் என கவுதம் கேட்பார்.

நான் அவருக்கு சரியான ஜோடி இல்லை என்ற விமர்சனங்கள் பார்க்கும் போது வலிக்கும், அப்போது நான் தோல்வியடைந்தவளாக உணர்வேன். ஆனால் கவுதம் எனக்கு எப்போதும் துணையாக இருந்திருக்கிறார் என பேசியுள்ளார்.

Share
Related Articles
23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்....

21 5
உலகம்செய்திகள்

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி

பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம்...

24 3
உலகம்செய்திகள்

அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை கொடுத்துள்ளோம்! இந்திய பாதுகாப்புத்துறை

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியிருக்கிறது என பாதுகாப்புத்துறை...

26 3
உலகம்செய்திகள்

3 வருடங்கள் போன் பயன்படுத்தாமல் SSC-ல் தேர்ச்சி பேற்று , பின்னர் UPSC-ல் தேர்ச்சி பெற்ற இளம் அதிகாரி யார்?

3 வருடங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 24 வயதில் யுபிஎஸ்சியில்...