10 40
சினிமாபொழுதுபோக்கு

பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறாரா விஷால்.? யாருக்கும் தெரியாத இன்னொரு பக்கம்

Share

பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறாரா விஷால்.? யாருக்கும் தெரியாத இன்னொரு பக்கம்

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நாளைய தினம் நடைபெற உள்ளது.

பிக்பாஸ் சீசன் 8ற்கான கிராண்ட் பைனலில் இறுதியாக முத்துக்குமரன், ரயான், விஷால் மற்றும் பவித்ரா, சௌந்தர்யா ஆகிய ஐந்து போட்டியாளர்களும் தேர்வாகியுள்ளனர். இதில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெறப் போகின்றார்கள் என்ற ஆவல் அனைவரிடத்திலும் காணப்படுகின்றது. மேலும் இன்றைய தினம் டபுள் எவிக்சன் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளராக கலந்து கொண்ட விஷால் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆகி மீண்டும் உள்ளே வந்த ராணவ், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்து போட்டியாளர்கள் பற்றியும் பேசியுள்ளார்.

விஷால் பற்றி முக்கியமான விஷயத்தை பகிர்ந்து உள்ளார். அதில் இந்த வயதில் இருந்தே பல உதவிகளை விஷால் செய்து வருவதாகவும், குறிப்பாக பெண் குழந்தைகளை படிக்க வைப்பதோடு நிறைய பேருக்கு டிரஸ் எடுத்துக் கொடுத்து உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தார். இது எல்லாமே அவர்களுக்கு தெரியாமல் செய்து கொண்டிருக்கின்றார் என்று சொல்லியுள்ளார்.

மேலும் ஒரு வருடத்திற்கான படிப்பு செலவு, டிரஸ் செலவு என எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கின்றார் விஷால். இன்னும் இது போன்ற நற்பணிகளை செய்ய வேண்டும் என ராணவ் வாழ்த்தியும் இருந்தார்.

இதன் போது பதில் அளித்த விஷால், ராணவுக்கு நன்றி சொல்லியதோடு, நான் யாருக்கு உதவி செய்கின்றேனோ அவர்களுக்கு இதுவரையில் நான் தான் உதவி செய்கின்றேன் என்பது தெரியாது, தன் வாழ்நாள் முழுவதும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...