தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான ‘பிரேமம்’ மூலம் அவர் அறிமுகமானார்.
அதன்பின்னர் தமிழ் பக்கம் வந்த அவர், தனுஷின் ‘கொடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர், இப்போது கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஒரு பேட்டியில் அனுபமா அவர் சந்தித்த சில சவால்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
“பிரேமம் படத்திற்குப் பிறகு, டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கத் தயங்கினேன், பயந்தேன். மலையாள சினிமாவில் பலர் எனக்கு நடிக்கத் தெரியாது என்று கூறினர். ஆனால், எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன்.
என் முழு உழைப்பைச் செலுத்தினேன். இன்று என்னைத் திரும்பிப் பார்த்தால் எனக்குப் பெருமையாக உள்ளது.
இப்போது, மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணியாற்றி வருகிறேன். எனது நடிப்பு வாழ்க்கை ஒரு புதிய அத்தியாயத்துக்குள் (New Chapter) நுழைந்திருக்கிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.