ரன்பீர் கபூர் – ஆலியா பட்டிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை ரன்பீர் கபூர் போட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ரன்பீர் கபூரின் ஷம்ஷேரா என்ற திரைப்படம் இம்மாதம் திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்திருந்தார்.
அவரிடம் 2 உண்மைகள் மற்றும் ஒரு பொய்யை சொல்ல வேண்டும் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில்அளித்த ரன்பீர், ‘எனக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர், மிகப்பெரும் புராதண படத்தில் நடிக்கப் போகிறேன், நடிப்பு தொழிலை விட்டு நீண்ட நாட்களுக்கு ஒதுங்கப் போகிறேன்’ என்று பதில் அளித்தார்.
இதன் அடிப்படையில் ரன்பீர் – ஆலியா ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கப்போவதாக கூறி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
#Alia Bhatt #RanbirKapoor
Leave a comment