தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மோட்டார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்ற சிற்றூந்து (Car) பந்தயத்தின் நடுவே அவரது கார் பழுதானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடிகர் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேசிங் அணி’யின் சார்பில் தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் சிற்றூந்து பந்தயப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்தப் போட்டியில், அஜித் பங்கேற்ற சிற்றூந்து திடீரென பாதியில் பழுதாகி நின்றது.
இதனையடுத்து, அந்தக் காரைச் சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அஜித் குமார் சமீபத்தில் ஸ்பெயினில் நடைபெற்ற சிற்றூந்து பந்தயத்தில் 3ஆவது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறவுள்ள சிற்றூந்து பந்தயப் போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்ளவிருக்கிறது.