நடிகை துளசி திடீர் அறிவிப்பு: டிசம்பர் 31க்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு

images 2 8

பிரபல நடிகை துளசி (Tulasi) ஒரு முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் நடிப்பை விட்டு விலகி, முழுமையாக ஆன்மீகப் பாதையில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1967ஆம் ஆண்டு பிறந்த நடிகை துளசி, தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்பூரி உள்ளிட்டப் பல மொழிகளில் 300இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ‘அரங்கேற்றம்’ எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் அவரது மகளாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அவர், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘மங்காத்தா’, ‘சர்கார்’, ‘ஆம்பள’, ‘வீரமே வாகை சூடும்’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘சபாநாயகன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார்.

பல தசாப்தங்களாகத் திரையுலகில் பயணித்த நடிகை துளசி, புத்தாண்டில் இருந்து நடிப்பை விட்டு விலகிச் சமய மற்றும் ஆன்மீகச் செயல்பாடுகளில் ஈடுபட முடிவெடுத்திருப்பது திரையுலக ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Exit mobile version