அந்த விஷயம் செய்ய விஜய்க்கு பயமா?… பத்திரிக்கையாளர் கேள்விக்கு சஞ்சீவ் பதில்

5 11

நடிகர் விஜய், தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நட்சத்திரம். கடைசியாக இவரது நடிப்பில் கோட் (The Greatest Of All Time) என்ற படம் வெளியானது.

ஆனால் அப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படத்துடன் அவர் சினிமாவை விட்டு விலகிவிட முடிவு செய்துவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். கடைசியாக கருரில் Road Show சென்றார் அங்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் தனது கட்சி வேலைகளை கொஞ்சம் தள்ளி வைத்துள்ளார்.

அண்மையில் விஜய்யின் நீண்ட கால நண்பரும், நடிகருமான சஞ்சீவ் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது சஞ்சீவிடம் கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்கள், ஊடகங்கள் சந்திப்பதற்கு விஜய்க்கு தைரியம் உள்ளதா? என்று கேட்டனர்.

அதற்கு சஞ்சீவ், அவருக்கு பயம்லாம் கிடையாது, சரியான நேரம் வரும்போது அவர் ஊடகங்களை சந்தித்து பதில் அளிப்பார் என்று தெரிவித்தார்.

Exit mobile version