32
சினிமாபொழுதுபோக்கு

சம்பளத்தை குறைத்துக்கொண்ட நயன்தாரா! கவின் படத்தில் இப்படி நடந்ததா?

Share

சம்பளத்தை குறைத்துக்கொண்ட நயன்தாரா! கவின் படத்தில் இப்படி நடந்ததா?

தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, டாக்சிக் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் டாக்சிக் திரைப்படத்தில் கேஜிஎப் ஹீரோ யாஷ் உடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முக்கிய நாயகர்களில் ஒருவர் கவின். இவருடைய அடுத்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளிவந்தது. இப்படத்தை லலித் குமார் தயாரிக்கிறாராம்.

முதலில் இப்படம் ட்ராப் ஆகும் சூழ்நிலைக்கு சென்று பின் அதிலிருந்து திரும்பியுள்ளது. காரணம் நயன்தாரா தனது சம்பளம் ரூ. 15 கோடி என கூறியது தானாம்.

முதலில் தனது சம்பளம் ரூ. 15 கோடி என கூறியவுடன் தயாரிப்பாளர் அது சரியாக இருக்காது, ரூ. 10 கோடி என்றால் ஓகே என கூறியுள்ளார். ஆனால் முதலில் இதற்கு சரி என நயன்தாரா கூறவில்லையாம்.

திடீரென ஒரு நாள் நயன்தாரா தரப்பில் இருந்து தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ரூ. 10 கோடி சம்பளம் ஓகே என கூறியபின் தான் இப்படம் துவங்கியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...