images 1 1
சினிமாபொழுதுபோக்கு

டி.ராஜேந்தர் அவர்களின் தாடிக்கு பின்னால் இப்படியொரு வேதனையா?

Share

டி.ராஜேந்தர் அவர்களின் தாடிக்கு பின்னால் இப்படியொரு வேதனையா?

கோலிவுட்டில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என அனைத்து துறைகளிலும் கலக்கியவர் தான் டி.ராஜேந்தர்.

இன்று அவர் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஒருதலை ராகம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் வெறும் இயக்கம் மட்டுமின்றி வசனம் எழுதுவது, கேமரா, இசையமைப்பு என எல்லா ஜானரிலும் கலக்கினார்.

இவரது மகன் சிம்புவும் சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் காட்டி வந்தார், சினிமாவில் பல துறைகளில் இவரும் சாதித்துள்ளார்.

டி.ராஜேந்தர் என நாம் நினைக்கும் போதே முதலில் நியாபகத்தில் வருவது அவரது தாடி தான். இந்த தாடிக்கு பின்னால் ஒரு கதை ஒன்று உள்ளது.

அது என்னவென்றால், கல்லூரிக்கு சேரும்போது தனது தாடியை ஷேவ் செய்துகொள்ள முடிவெடுத்தாராம்.

ஆனால் அவரது உறவினர் ஒருவர், இவர் மூஞ்சிக்கெல்லாம் ஷேவிங் ஒரு கேடா, சும்மா இருந்தா காசும், பிளேடும் மிஞ்சும் என்று சொன்னாராம். இதனால் பாதிக்கப்பட்ட ராஜேந்தர் வாழ்க்கையில் வென்ற பிறகே தாடி எடுக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளார்.

பிறகு சினிமாவில் சாதித்த பிறகு, வெற்றிக்கண்ட போது தாடி இருந்ததே இப்போது ஏன் எடுக்க வேண்டும் என்று அப்படியே விட்டுவிட்டாராம்.

Share
தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...