சமையல் குறிப்புகள்

பன்னீர் பாப்கார்ன்

Published

on

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்

மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – ½ தேக்கரண்டி

சோள மாவு – 5 தேக்கரண்டி

ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறை – 100 கிராம்

பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பன்னீரை சிறிய சதுர வடிவ துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை, சிறிது மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் மிளகு தூள், சோள மாவு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கலக்கிக்கொள்ளவும்.

பின்னர் மசாலா கலந்திருக்கும் பன்னீர் துண்டுகளை, சோளமாவு கலவையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் புரட்டி எடுத்து, மீண்டும் சோளமாவு கலவையில் தோய்த்து, எண்ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான மொறு மொறு பன்னீர் பாப்கார்ன் தயார். இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

#LifeStyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version