எங்கள் குடும்பத்தின் மாயாவி இவள்- மகிழ்ச்சியின் உச்சத்தில் பாலிவுட் ஜோடி

பாலிவுட் நடிகை ஆலியா பட் – நடிகர் ரன்பீர் ஆகியோர் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சமீபத்தில் ஆலியா பட் கர்ப்பமாகி, பின்னர் மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் புகைப்படம் வைரலானது.

இன்று காலை பிரசவவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

1787825 bha3

இந்நிலையில் இது எங்களுடைய வாழ்வில் கிடைத்த நற்செய்தி.. இதோ எங்களுடைய குழந்தை.. என்ன ஒரு மாயாவி அவள்.. நாங்கள் சந்தோஷத்தில் திளைக்கிறோம்- ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அன்பான பெற்றோர். அன்புடன் ஆலியா மற்றும் ரன்பீர் என்று ஆலியா பட் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#cinema

Exit mobile version