பிரபல நடிகையான தீபிகா படுகோனேவுக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.
இதனால் உடனடியாக அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதன்பின் அவருக்கு தொடர்ச்சியாக பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. டாக்டர்களின் சிகிச்சைக்கு பின்பு அவர் உடல்நலம் தேறி வருகிறார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜூனில் ஐதராபாத்தில், நடிகர் பிரபாஸ் உடனான படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது, தீபிகாவுக்கு இதய துடிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் உடல் பரிசோதனைக்காக காமினேனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இத்தகவல் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
#deepikapadukone
Leave a comment