அதிர்ச்சியில் சின்னத்திரை: கௌரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை!

BeFunky 40 scaled 1

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற ‘கௌரி’ சீரியலில் நடித்து வந்த இளம் நடிகை நந்தினி, பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகி இருக்கும் தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நந்தினி, ‘கௌரி’ தொடரில் துர்கா மற்றும் கனகா என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் (இரட்டை வேடம்) நடித்துத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சீரியல் படப்பிடிப்பில் இருந்து சிறு இடைவேளை (Break) எடுத்துக்கொண்டு பெங்களூரு சென்றிருந்த நந்தினி, அங்கு தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

கன்னடத் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் தனது கலைப்பயணத்தைத் தொடங்கிய நந்தினிக்கு, தமிழில் அவர் நடித்த முதல் தொடரான ‘கௌரி’யே மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. தனது முதல் தமிழ் சீரியலிலேயே சவாலான இரட்டை வேடங்களை ஏற்றுச் சிறப்பாக நடித்து வந்தார்.

நந்தினியின் இந்தத் திடீர் முடிவிற்கான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. அவரது மறைவு குறித்துத் தகவல் அறிந்த சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். காவல்துறை இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

 

 

Exit mobile version