tamilni 228 scaled
இலங்கைசெய்திகள்

ஒரே இரவில் ரூபாவின் பெறுமதியில் மாற்றம்?

Share

ஒரே இரவில் ரூபாவின் பெறுமதியில் மாற்றம்?

இப்போது இருக்கின்ற இந்த சூழ்நிலையை பார்க்கின்ற போது நாட்டுக்குள்ளே போதிய அளவு டொலர் உள்வருகை ஏற்படாவிட்டால் இறக்குமதிகளை ஏதோ ஒரு வகையிலே கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்காலத்தில் இலங்கை ரூபாவுக்கு எதிராக பல வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி அதிகரிக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனினும், மத்திய வங்கி அவ்வாறு அதிகரிப்பதை தடுக்கக் கூடிய சாத்தியங்களும் உண்டு.

ஆரம்பத்தில் பிரச்சினைகள் அதிகரித்திருந்த காலப்பகுதியில், இலங்கை மத்திய வங்கி ரூபாவினுடைய பெறுமதியை நிலையான மட்டத்திலே பேணி வந்தது. பிறகு திடீரென்று ஒரே தடவையிலே அதனை நீக்கிக் கொண்டபடியால்தான் இலங்கை ரூபாவின் பெறுமதி, டொலர் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக திடீரென்று குறைவடையத் தொடங்கியது.

இந்தமுறை அந்த தவறை விட மாட்டார்கள். மாறாக இவ்வாறு டொலர் சந்தையில் குறைவாக வந்து கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் இலங்கை ரூபாவை தேய்வடைய அனுமதிப்பார்கள்.

அவ்வாறு அனுமதிப்பதன் மூலமாக இலங்கை ரூபாவினுடைய பெறுமதி சிறிது சிறிதாக குறைவடையக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு. ஆரம்பத்தில் நடந்தது போன்று ஒரே இரவிலே அது மிகப்பெரிய அளவிலே தேய்வடையக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை.

ஆனால் இப்போது இருக்கின்ற இந்த சூழ்நிலையை பார்க்கின்ற போது நாட்டுக்குள்ளே போதிய அளவு டொலர் உள்வருகை ஏற்படாவிட்டால் இறக்குமதிகளை ஏதோ ஒரு வகையிலே கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அதேபோல, இந்த எரிபொருள் கோட்டா போன்றவற்றை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.

என்னைப் பொறுத்தவரையில், டொலரினுடைய பெறுமதி ஆரம்பத்தில் நிகழ்ந்தது போல ஒரேநேரத்தில் மிகப் பெரிய அளவில் உயர்வதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே கருதுகின்றேன் என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...