rtjy 206 scaled
இலங்கைசெய்திகள்

சுதந்திரக் கட்சியில் தயாசிறிக்கு புதிய பதவி

Share

சுதந்திரக் கட்சியில் தயாசிறிக்கு புதிய பதவி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியை வழங்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் யோசனை முன்வைத்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

தயாசிறி ஜயசேகர கட்சியுடன் இணைந்து பயணிக்க முன்வருமானால் தவிசாளர், செயலாளர் ,தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளைத்தவிர ஏனைய எந்தவொரு பதவியையும் வழங்குவதற்கு தயார் என கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

இதற்கமையவே சிரேஷ்ட உப தலைவர் பதவியை தயாசிறிக்கு வழங்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தற்சமயம் வெளிநாடு சென்றுள்ளார்.

அவர் நாடு திரும்பிய பின்னரே அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி முடிவெடுப்பார் எனத் தெரியவருகின்றது.

எனினும், சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறப்போவதில்லை என்ற உறுதியான அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...