tamilni 206 scaled
இந்தியாசெய்திகள்

இராமேஸ்வர கடற்றொழிலாளர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்

Share

இராமேஸ்வர கடற்றொழிலாளர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமேஸ்வரம் மண்டபம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து நேற்று முன் தினம் கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 27 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் இன்று (17) இராமேஸ்வரத்தில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று முன் தினம்(15) இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் பாம்பன் சாலை பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று(16) ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோபு அவர்கள் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் பாம்பன் சாலை பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்ததை மீளப் பெறுவதாகவும், ஆனால் இன்று (17) இராமேஸ்வரத்தில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...