9 4 scaled
சினிமாசெய்திகள்

முதல் முறையாக லியோ பற்றி வாய்திறந்த சூப்பர் ஸ்டார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

Share

முதல் முறையாக லியோ பற்றி வாய்திறந்த சூப்பர் ஸ்டார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் ரஜனிகாந்த ஊடகவியலாளர்களுக்கு நடிகர் விஜய் அவர்களின் லியோ படம் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் எல்லாம் போட்டியிட்டு இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ரஜினிக்கு போட்டியாக விஜய் இருப்பதாக சொல்லி வருகிறார்கள். இதைப் பற்றி அவர்கள் இருவருமே வாயைத் திறந்து எந்த கருத்தும் சொல்லியது கிடையாது.

ரஜினியின் சமீபத்திய ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட ரஜினி பேசியது எல்லாமே விஜய்க்கு பதிலடி தான் என கிளப்பி விடப்பட்டது. அதிலும் ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 600 கோடி வசூல் செய்து விட்டதால் அடுத்த விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படம் ஆயிரம் கோடியை தொட்டுவிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் சபதமிட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் ரஜனிகாந்த் முதல்முறையாக லியோ படம் பற்றி வாயைத் திறந்து பேசி இருக்கிறார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தற்போது ரஜினி தன்னுடைய 170 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியூர் மற்றும் பண குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு சமயத்தில் அவ்வப்போது ரஜினி பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்.

அப்படி ஒரு சந்திப்பில் இன்று ரஜினியிடம் லியோ படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி, “விஜய் நடித்த லியோ படம் வெற்றி அடைய வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார். ரஜினியின் இந்த பதில் எல்லோரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பெரிய மனிதன் எப்போதுமே பெரிய மனிதன் தான் என மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார் ரஜினிகாந்த்.

ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் எங்களுடைய தலைவரை வைத்து லியோவிற்கு விளம்பரம் தேடுகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். அதற்கு விஜய் ரசிகர்கள் பதிலுக்கு லியோ, லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் தான் ரஜினி இப்படி சொல்லி இருக்கிறார். இந்த படம் ஜெயித்தால் தான் தலைவர் 171 படத்தின் மீது ஹைப் இருக்கும் என்பதால் தான் ரஜினி இப்படி சொல்லி இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ரஜனி மற்றும் விஜய் இடையில் உள்ளே போட்டி இருக்கிறதா என்று கேட்டால் தெரியவில்லை என்றுத்தான் கூறலாம் ஆனால் ரசிகர்களிடத்தில் பலத்த சண்டையே நடைபெறுகிறது. இறுதியில் அந்த காக்கை , கழுகு கதைக்கு முடிவு வந்தால்தான் ரசிகர்கள் சண்டையும் குறையும்.

Share
தொடர்புடையது
10 30
இலங்கைசெய்திகள்

27ஆம் திகதி நள்ளிரவு வரை காலக்கெடு! தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், வேட்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின்...

15 27
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் அடுத்த தலைமை குறித்து ரவூப் ஹக்கீம் வெளிப்படை

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைமையை தீர்மானிப்பது பேராளர் மாநாட்டிலே ஆகும். ஆனால் இதுவரையில் அதற்கான எந்த...

14 29
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் தொடருந்துடன் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

கிளிநொச்சி- பாரதிபுரம் பகுதியில் தொடருந்துடன் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று...

9 29
இலங்கைசெய்திகள்

யாழில் அத்துமீறி சுவீகரிக்கப்பட்ட பொதுக்காணி : சுமந்திரன் நேரடி விஜயம்

யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் பொதுக் காணி ஒன்றை அத்துமீறி சுவீகரித்துள்ளமை தொடர்பாக கிடைத்த...