tamilni 158 scaled
இலங்கைசெய்திகள்

ஆழ்கடலில் சிக்கிய அரிய வகை மீன்

Share

ஆழ்கடலில் சிக்கிய அரிய வகை மீன்

ஆழ்கடலில் மறைந்திருக்கும் அற்புதங்கள் ஒவ்வொரு நாளும் உலகத்தை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.

அந்த வகையில் புத்தளம் – நைனாமடு பகுதியில் ஆழ்கடலில் கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிளாலர்களின் வலையில் அரியவகை மீன் இனம் ஒன்று சிக்கியுள்ளது.

இதுபோன்ற அரிய வகை மீனைப் பார்ப்பது இதுவே முதல் முறை எனவும், துறைமுகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் துறைமுக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வகை மீன் உட்கொள்ள உகந்தவை அல்ல என்பதுடன் இந்த மீன் இனமானது முயல் மீன் (Rhinochimaera atlantica – Broadnose Chimaera) என அழைக்கப்படுகிறது.

மேலும், இது கனடா, கொலம்பியா, பிரான்ஸ், காம்பியா, ஐஸ்லாந்து, மொரிட்டானியா, மெக்சிகோ, நமீபியா, செனகல், தென்னாப்பிரிக்கா, சுரினாம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுவதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த மீன் Longnose chimaeras குடும்பத்தை ஒத்த இனமாகும் மற்றும் மிதமான கடல்களில் 1,500 மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் வாழ்கின்றது.

Share
தொடர்புடையது
25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...

25 67b2a35a1d69d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – மாத்தறை வீதியில் கார் விபத்து: மின் கம்பத்தில் மோதி விபரீதம் – போக்குவரத்து பாதிப்பு!

காலி – மாத்தறை பிரதான வீதியின் தலவெல்ல பகுதியில் இன்று (26) காலை கார் ஒன்று...

1722842228 IMG 20240804 WA0019
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எதிமலை – கொட்டியாகலவில் 2 கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைப்பு: 7,000-க்கும் மேற்பட்ட செடிகள் அழிப்பு!

எதிமலை – கொட்டியாகல வனப்பகுதியில் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த இரண்டு பாரிய கஞ்சாத் தோட்டங்கள்...

IMG 9868 3 6 2022 14 5 5 4 1 CDBK64AO
இந்தியாசெய்திகள்

ஒற்றையாட்சி முறை மீண்டும் ஈழப் போராட்டத்திற்கு வழிவகுக்கும் – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

இலங்கையில் ஒற்றையாட்சி முறையைத் திணிக்க எடுக்கும் முயற்சிகள், அடக்கப்பட்ட நிலையில் உள்ள தமிழ் ஈழ விடுதலைப்...