1 21 scaled
உலகம்செய்திகள்

லொட்டறியில் பெருந்தொகை பரிசை அள்ளி கண்கலங்கிய இந்தியர்

Share

லொட்டறியில் பெருந்தொகை பரிசை அள்ளி கண்கலங்கிய இந்தியர்

இந்தியாவின் மராட்டிய மாகாணத்தை சேர்ந்த நபர் பிழைப்புக்காக ஐக்கிய அமீரகம் சென்றிருந்த நிலையில், நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு நெகிழ்ச்சி திருப்பமாக லொட்டறியில் ரூ.55 லட்சம் வென்றுள்ளார்.

மராட்டிய மாகாணம் மும்பை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் சேவியர் பெர்னாண்டஸ். கடந்த 1996ல் பிழைப்புக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சென்றுள்ளார். துபாய் மாகாணத்தில் புதிய வாழ்க்கையை தேடிய அவருக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.

தற்போது, நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு, நெகிழ்ச்சி திருப்பமாக MEGA7 லொட்டறியில் இரண்டாவது பரிசாக Dh250,000 அள்ளியுள்ளார். இதற்கு முன்னர் பலமுறை சிறிய தொகைகளை லொட்டறியில் வென்றிருந்தாலும், பெருந்தொகையை பரிசாக வெல்வது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளார்.

லொட்டறி நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்த அடுத்த சில நிமிடங்களில் தமது அன்பு மனைவிக்கு தெரியப்படுத்தியதாகவும், அந்த தொகையை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார் எனவும் அலெக்ஸ் சேவியர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

MEGA7 லொட்டறியில் முதல் பரிசான ரூ.226 கோடியை இதுவரை தனியாகவோ, குழுவாகவோ மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாட்டவர்களில் எவரும் வென்றதில்லை என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...