tamilni 62 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடுமையாக நடைமுறையாகும் சட்டம்

Share

இலங்கையில் கடுமையாக நடைமுறையாகும் சட்டம்

ரயில் சேவை உட்பட பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்காக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் செப்டம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், இது ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.

பணிப்பகிஷ்கரிப்பு அல்லது வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில்வே ஊழியர்களும் உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சேவையை கைவிட்டவர்களாக கருதப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், ஒரு தாக்குதலின் அடிப்படையில் ரயில்வே ஊழியர்களின் குழுவால் தொடங்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ரயில்வே உதவிக் காவலர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று அனைத்து உதவிக் காவலர்களும் நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....