2 3 scaled
உலகம்செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த 14 வயது சிறுமி: இளைஞனின் கொடூரச் செயல்

Share

ஆசைக்கு இணங்க மறுத்த 14 வயது சிறுமி: இளைஞனின் கொடூரச் செயல்

ஜேர்மனியில், காணாமல் போன 14 வயது சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவளுக்கு அறிமுகமான 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இரண்டு 14 வயது சிறுமிகள்
கடந்த புதன்கிழமையன்று, பிராங்க்பர்ட்டுக்கு வடக்கே உள்ள Bad Emstal என்னுமிடத்தில், 14 வயது சிறுமி ஒருத்தி காணாமல்போனாள்.

அவளை பொலிசார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், வியாழக்கிழமையன்று அவளது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, அந்தச் சிறுமிக்கு அறிமுகமான 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமையன்று, 14 வயது சிறுமி ஒருத்தியைக் கொலை செய்த 30 வயது நபர் ஒருவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், தெற்கு ஜேர்மனியிலுள்ள Gottenheim என்னுமிடத்தில், Ayleen என்னும் 14வயது சிறுமி காணாமல்போனாள்.

அவளும், Jan Heiko P (30) என்னும் நபரும் சமூக ஊடகம் ஒன்றில் ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகளை பகிர்ந்துகொண்டது தெரியவரவே, பொலிசார் அவரைக் கைது செய்தனர். Ayleen தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவளை Heiko கொடூரமாக கொலை செய்ததாக கூறிய நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Heiko மீது, கொலை, வன்புணர்வு முயற்சி முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த Heiko, தனக்கு 14 வயது இருக்கும்போதே, 11 வயது சிறுமி ஒருத்தியை வன்புணர முயன்றது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...