2 2 scaled
உலகம்செய்திகள்

கூகுள் Maps பின்பற்றி ஓட்டி ஆற்றில் கவிழ்ந்த கார்

Share

கூகுள் Maps பின்பற்றி ஓட்டி ஆற்றில் கவிழ்ந்த கார்

கேரளாவில் பெரியாறு ஆற்றில் கார் கவிழ்ந்ததில் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை கோதுருத் பகுதியில் உள்ள பெரியாறு ஆற்றில் கார் கவிழ்ந்ததில் இரண்டு இளம் மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் அத்வைத் (29), அஜ்மல் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்வைத் மற்றும் அஜ்மல் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களுடன் பயணித்த மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கூகுள் மேப்பை பின்பற்றியபடி சாரதி அப்பகுதியை அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனால், கனமழை காரணமாக சாலை தெரியாததால், கூகுள் மேப் காட்டிய வழியையே பின்பற்றினர்.

எவ்வாறாயினும், கூகுள் மேப்ஸ் சுட்டிக்காட்டப்பட்டபடி கார் இடதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக தவறுதலாக முன்னோக்கிச் சென்று ஆற்றில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு படையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஒரு பெண் உட்பட மூன்று பயணிகள் மீட்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். இறந்த இரு மருத்துவர்களின் உடல்களை மீட்க ஸ்கூபா டைவிங் குழுவை அதிகாரிகள் அனுப்பினர்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...