6 1 scaled
உலகம்செய்திகள்

விநாயகர் சிலையை குளத்தில் கரைத்த போது 4 சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

Share

விநாயகர் சிலையை குளத்தில் கரைத்த போது 4 சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

இந்திய மாநிலம், மத்திய பிரதேசத்தில் விநாயகர் சிலையை குளத்திற்கு சென்று கரைத்த போது, 4 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 18 ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ள நிராவல் பிடானியா கிராமத்தில் உள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பின்பு, விநாயகர் சிலையை குளத்திற்கு சென்று கரைப்பதற்காக கிராமத்தினர் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

அப்போது, விநாயகர் சிலையை குளத்தில் கரைத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சிறுவர், சிறுமியர் 7 பேர் குளத்தில் மூழ்கினர்.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர், 3 சிறுவர்களை காப்பாற்றினார். எனினும், 3 சிறுமிகள் உள்பட 4 பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...