tamilni 352 scaled
உலகம்செய்திகள்

லண்டனில் பாடசாலை சென்ற மாணவிக்கு நேர்ந்த துயரம்

Share

லண்டனில் பாடசாலை சென்ற மாணவிக்கு நேர்ந்த துயரம்

பிரித்தானியாவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் 15 வயது மாணவியை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லண்டனின் க்ராய்டன்(Croydon) பகுதியில் உள்ள விட்கிஃப்ட்(Whitgift) அருகில் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்லும் வழியில் 17 வயது டீன் ஏஜ் சிறுவன் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெல்லஸ்லி(Wellesley ) சாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் மற்றும் அவசர குழுவினர் மாணவியின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

” மாணவி கத்தியால் கழுத்தில் குத்தப்பட்டு பேருந்துக்கு அருகே சரிந்து விழுந்த உடனே பேருந்து சாரதி மற்றும் பிற பயணிகள் மாணவியை காப்பாற்ற விரைந்துள்ளனர்.

காலை 8.30 மணியளவில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், காலை 9.20 மணி அளவில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் வழங்கிய தகவலின் படி, பாதிக்கப்பட்ட மாணவியும், தாக்குதலை மேற்கொண்ட சிறுவனும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் எனவும், எனவே தாக்குதலுக்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கத்திக்குத்துக்கு ஆளான மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...