rtjy 259 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகிந்தானந்த

Share

அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகிந்தானந்த

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே உத்தியோகபூர்வ பயணமாக அமெரிக்கா சென்றமைக்கான காரணம் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவித்துள்ளார்.

மகிந்தானந்த அளுத்கமகே, மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் ரணிலை சிறையில் அடைக்கும் வரை தம்மால் தூங்க முடியாது என்று கூறியவர்.

ஒருவேளை அவருக்கு தூக்கம் வராததால் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், மகிந்தானந்த மட்டுமல்ல ரோகித அபேகுணவர்த்தனவும் ரணிலுடன் அமெரிக்காவில் இருந்தார் என்று ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு வரும் அவர்கள் இருவரும், ஜனாதிபதியுடன் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் விரைவில் ஜனாதிபதியுடன் இணைந்துகொள்ளும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ எதிர்வை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...