உலகம்செய்திகள்

சீக்கிய அமைப்புகள் கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை

Share

சீக்கிய அமைப்புகள் கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை

கனடாவின் இரண்டு பிரதான சீக்கிய அமைப்புகள், இந்தியாவுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

சீக்கிய தலைவர் ஒருவர் படுகொலையில் இந்திய அரசாங்கத்திற்கு உறுதியான தொடர்பிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அறிவித்த நிலையிலேயே இந்த இரு அமைப்புகளும் கனேடிய அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

ஒன்ராறியோவின் குருத்வாராஸ் கமிட்டி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் குருத்வாராஸ் கவுன்சில் ஆகிய இரு சீக்கிய அமைப்புகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளன.

ஜூன் மாதத்தில் நடந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் வெளிநாட்டு சதி இருப்பது தொடர்பில் கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒருமித்த கருத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளன.

செப்டம்பர் 18ம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பில் அம்பலப்படுத்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடிய உளவு அமைப்புகள் திரட்டிய தரவுகளின் அடிப்படையில், இந்திய அரசாங்கத்திற்கு ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் தொடர்பிருப்பதாக உறுதி செய்திருந்தார்.

காலிஸ்தான் பிரிவினைவாதி என குறிப்பிட்டு ஹர்தீப் சிங் நிஜ்ஜரை கைது செய்ய இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஆணை பிறப்பித்திருந்தது. ஆனால் தொடர்புடைய படுகொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என்றே இந்தியா தற்போது மறுத்து வருகிறது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் விளக்கமளித்த பின்னர், என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவிக்கையில், இந்த கொலை வழக்கு விசாரணையில் இந்தியாவையும் உட்படுத்த வேண்டும் என தாம் கியூபெக் மேல்முறையீடு நீதிமன்றத்திற்கு எழுத்து மூலமாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...