rtjy 222 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள்

Share

இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள்

செப்டெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, 20 நாட்களுக்குள் நாட்டிற்கு 75,000இற்கும் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி,

செப்டெம்பர் மாதத்தில் இதுவரை 75,222 வெளிநாட்டு பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

செப்டெம்பர் மாதத்திலும் 19,767 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வரும் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 5,336 நபர்களும், ஜேர்மனியிலிருந்து 5,199 பேரும், ரஷ்யாவிலிருந்து 4,835 பேரும், சீனாவிலிருந்து 4,338 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 4,064 சுற்றுலாப் பயணிகளும் இந்த 20 நாட்களுக்குள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மொத்தம் 136,405 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதன்படி, இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 979,540 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...