rtjy 222 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள்

Share

இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள்

செப்டெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, 20 நாட்களுக்குள் நாட்டிற்கு 75,000இற்கும் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி,

செப்டெம்பர் மாதத்தில் இதுவரை 75,222 வெளிநாட்டு பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

செப்டெம்பர் மாதத்திலும் 19,767 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வரும் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 5,336 நபர்களும், ஜேர்மனியிலிருந்து 5,199 பேரும், ரஷ்யாவிலிருந்து 4,835 பேரும், சீனாவிலிருந்து 4,338 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 4,064 சுற்றுலாப் பயணிகளும் இந்த 20 நாட்களுக்குள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மொத்தம் 136,405 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதன்படி, இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 979,540 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
11 3
செய்திகள்இந்தியா

விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு: நடிகர் விஜய்யின் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள...

10 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பகுதி சந்திர கிரகணத்தைக் காணும் அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆர்தர்...

09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...