23 650eed8ea8ef2
உலகம்செய்திகள்

ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து!

Share

ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து!

திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலானது குஜராத் மாநிலத்தின் வால்சத் ரயில் நிலையத்தில் நின்று சென்றது.

அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே ரயிலின் ஜெனெரேட்டர் பெட்டியில் தீ பிடித்துள்ளது. ரயிலில் இருந்து தீ பரவுவதை பார்த்ததும் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும், ரயிலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று செயல்படுத்தப்பட்டன.

இந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மின்கசிவு தான் காரணம் எனவும் கூறப்படுகிறது. முக்கியமாக, ரயிலில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

அதுமட்டுமல்லாமல், ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் கரண்ராஜ் வகெலாகூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...