tamilni 235 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதி இளஞ்செழியனின் தாயாரது உடல் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமம்

Share

நீதிபதி இளஞ்செழியனின் தாயாரது உடல் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமம்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகரின்(வயது 86) உடல் ஊர்மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமித்துள்ளது.

வேலணை மண்ணில் பிறந்து, வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை பயின்று, வேலணை மத்திய கல்லூரியில் உயர் கல்வியை கற்று, ஆசிரியராக வேலணை கிழக்கு மகா. வித்தியாலயத்தில் நியமனம் பெற்று அதிபராக அதே பாடசாலையில் பதவி உயர்வு பெற்று 35 ஆண்டுகள் கல்வி பணியை நிறைவேற்றிய அமரர் ஓய்வு நிலை அதிபர் சிவபாக்கியம் மாணிக்கவாசகரின் இழப்பு பேரிழப்பு என அன்னாரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அமரர், 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைகளை நிலைநாட்டியவர். வேலணை மண்ணின் மாணவ செல்வங்களை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய செய்து யாழின் பிரபல பாடசாலைகளில் அனுமதி கிடைக்க வழி செய்தவர்.

14.09.2023 இயற்கையெய்திய அமரர் இரண்டு நாட்கள் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது, நீதிபதிகள், சட்டமா அதிபர்கள், அரச வைத்தியர்கள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், சட்டத்தரணிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

17.09.2023 இரண்டு நாட்கள் அன்னார் யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைத்தபோது நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

18.09.2023 இறுதிக்கிரியைகள் இடம்பெற்று அன்னார் பிறந்த மண்ணில் வேலணை கிழக்கு மக வித்தியாலயம் முன்பாக அமரரின் ஊர்தி சென்ற போது பாடசாலை மாணவிகள் பூச்சரங்கள் இட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

அன்னாரின் பூர்வீக வீட்டில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் உடற்கல்வி துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இளம்பிறையன் ஆகியோரின் தாயாரான சிவபாக்கியம் மாணிக்கவாசகர் வேலணை சாட்டி மயானத்தில் அக்கினியில் ஊர்மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் சங்கமித்தார்.

Share
தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

image 870x 69608d70c6314
செய்திகள்அரசியல்இலங்கை

வடக்கிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுர: காற்றாலை மின் திட்டம் மற்றும் வீட்டுவசதித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (15) மற்றும் நாளை (16) ஆகிய இரு தினங்கள் வடமாகாணத்தில்...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...