tamilni 235 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதி இளஞ்செழியனின் தாயாரது உடல் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமம்

Share

நீதிபதி இளஞ்செழியனின் தாயாரது உடல் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமம்

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகரின்(வயது 86) உடல் ஊர்மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் தீயில் சங்கமித்துள்ளது.

வேலணை மண்ணில் பிறந்து, வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை பயின்று, வேலணை மத்திய கல்லூரியில் உயர் கல்வியை கற்று, ஆசிரியராக வேலணை கிழக்கு மகா. வித்தியாலயத்தில் நியமனம் பெற்று அதிபராக அதே பாடசாலையில் பதவி உயர்வு பெற்று 35 ஆண்டுகள் கல்வி பணியை நிறைவேற்றிய அமரர் ஓய்வு நிலை அதிபர் சிவபாக்கியம் மாணிக்கவாசகரின் இழப்பு பேரிழப்பு என அன்னாரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அமரர், 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைகளை நிலைநாட்டியவர். வேலணை மண்ணின் மாணவ செல்வங்களை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய செய்து யாழின் பிரபல பாடசாலைகளில் அனுமதி கிடைக்க வழி செய்தவர்.

14.09.2023 இயற்கையெய்திய அமரர் இரண்டு நாட்கள் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது, நீதிபதிகள், சட்டமா அதிபர்கள், அரச வைத்தியர்கள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், சட்டத்தரணிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

17.09.2023 இரண்டு நாட்கள் அன்னார் யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைத்தபோது நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

18.09.2023 இறுதிக்கிரியைகள் இடம்பெற்று அன்னார் பிறந்த மண்ணில் வேலணை கிழக்கு மக வித்தியாலயம் முன்பாக அமரரின் ஊர்தி சென்ற போது பாடசாலை மாணவிகள் பூச்சரங்கள் இட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

அன்னாரின் பூர்வீக வீட்டில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் உடற்கல்வி துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இளம்பிறையன் ஆகியோரின் தாயாரான சிவபாக்கியம் மாணிக்கவாசகர் வேலணை சாட்டி மயானத்தில் அக்கினியில் ஊர்மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் சங்கமித்தார்.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...