4 23 scaled
உலகம்செய்திகள்

எதிர்க்கட்சியினரை கொலை செய்த பெலாரஸ் ஜனாதிபதியின் கூலிப்படை உறுப்பினர்

Share

எதிர்க்கட்சியினரை கொலை செய்த பெலாரஸ் ஜனாதிபதியின் கூலிப்படை உறுப்பினர்

பெலாரஸ் ஜனாதிபதியின் கூலிப்படையில் உறுப்பினராக இருந்த ஒருவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.

சில நாடுகளில், ஆட்சியாளரை எதிர்த்துக் கேள்வி கேட்டால் கொலை செய்யும் பயங்கரம் இன்றும் காணப்படுகிறது. அவ்வகையில், பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியான Alexander Lukashenkoவின் கூலிப்படையினராகிய ஒருவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

1999ஆம் ஆண்டு, பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சியினர் மூன்று பேரை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் பங்கிருப்பதாக Yuri மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை Yuri ஒப்புக்கொண்டுள்ளார். தன் நாட்டைலிருந்து தப்பி வெளியேறிய பின் சுவிட்சர்லாந்தின் St.Gallen மாகாணத்தில் 2018ஆம் ஆண்டு முதல் வாழ்ந்துவருகிறார் அவர். அவர் சுவிட்சர்லாந்தில் வாழ்வதாலேயே, அவர் மீது சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

தான் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பேச ஒப்புக்கொண்டதையடுத்து பெலாரஸில் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறி, சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியிருந்தார் Yuri.

Share
தொடர்புடையது
11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு...

10 17
இலங்கைசெய்திகள்

இஷாராவை புகழ்ந்து பாராட்டும் பிரதி அமைச்சர்

அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான இஷாரா செவ்வந்தியை வீடமைப்பு மற்றும்...

9 15
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி – வெளிநாட்டில் சுற்றிவளைக்கப்படும் மற்றுமொரு குழு – கலக்கத்தில் 25 பேர்

அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

8 16
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி கைது : முக்கிய விசாரணைக்காக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

இஷாரா செவ்வந்தி மற்றும் 5 சந்தேகநபர்களை 72 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸாருக்கு...