rtjy 183 scaled
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் தோல்வியால் 100 பில்லியன் டொலர்களை இழந்த இலங்கை

Share

மகிந்தவின் தோல்வியால் 100 பில்லியன் டொலர்களை இழந்த இலங்கை

அன்று 2015இல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்காவிட்டால் இன்று 100 பில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடாக இலங்கை அபிவிருத்தி அடைந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டிலுள்ள, கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், தொழிலாளிகள் ஆகியோரை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எமது கிராமங்களில் அஸ்வெசும திட்டம் தொடர்பில் பெரிதும் பேசப்பட்டது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்த சமுர்த்தியை குறைந்தது ஒரு வருடமாவது நீடிக்கச் செய்தாலே இது சாத்தியமாகும் என நாங்கள் நினைக்கின்றோம்.

உடனடியாக இந்த நடவடிக்கைகளை நிறுத்தினால் மக்களுக்கு நியாயம் கிடைக்காது. அதேசமயம், அஸ்வெசும திட்டத்தினால் மக்களுக்கு கிடைக்கவுள்ள பயனும் கிடைக்காமல் போகும்.

அன்று 2015இல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்காவிட்டால் இன்று 100 பில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடாக இலங்கை அபிவிருத்தி அடைவது மாத்திரம் அல்ல அம்பாந்தோட்டை மாவட்டத்தை தெற்காசியாவில் சிறந்த பொருளாதார வலயமாக மாறியிருக்கும். துரதிஷ்டவசமாக அதனை செய்ய முடியாமல் போனது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...