rtjy 146 scaled
இலங்கைசெய்திகள்

ஜோர்தானில் பணிபுரியும் பெண்களுக்கான காப்பீடு அறிமுகம்

Share

ஜோர்தானில் பணிபுரியும் பெண்களுக்கான காப்பீடு அறிமுகம்

ஜோர்தானில் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய காப்புறுதிக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, பெண் தொழிலாளியை சம்பந்தப்பட்ட வேலைக்கு அமர்த்தும் முதலாளி இந்த காப்பீட்டை பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு வேலைக்காக பணியகத்தில் பதிவு பெறுவதற்கு தொழிலுக்காக செல்லும் பெண்கள் இந்த காப்பீட்டு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜோர்தானில் வீட்டு வேலையில் ஈடுபடும் பெண்கள் இந்தக் காப்பீட்டைப் பெறுவது கட்டாயமாகும், அதற்காக ஜோர்தானில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று காப்பீட்டுத் திட்டங்களில் தகுந்த காப்பீட்டைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது வேலை ஒப்பந்த காலத்தில் பணியாளரின் மரணம் அல்லது நிரந்தர முழு ஊனம் ஏற்பட்டால் காப்பீட்டு இழப்பீடு வழங்குகிறது. இது தவிர, மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் கோவிட் போன்ற தொற்றுநோய்களுக்கு காப்பீடு இழப்பீடும் கிடைக்கிறது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...