உலகம்செய்திகள்

முதன்முறையாக நாடொன்றிற்குச் செல்லும் ஜனாதிபதி

Share

முதன்முறையாக நாடொன்றிற்குச் செல்லும் ஜனாதிபதி

இந்தியாவில் G 20 உச்சி மாநாட்டில் பங்கேற்றபின், பங்களாதேஷ் நாட்டிற்குச் செல்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி.

உச்சி மாநாடுகள், தங்களுக்கு இலக்கு வகுக்கப்பட்ட நோக்கத்துடன் முடிந்துவிடுவதில்லை. அவை மேலும் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வளர்க்க, வலுப்படுத்த உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

அதற்கு நல்லதோர் உதாரணமாக அமைந்துள்ளது, பிரான்ஸ் ஜனாதிபதியின் பங்களாதேஷ் பயணம். ஆம், இந்தியாவில் G 20 உச்சி மாநாடு முடிந்ததும், பங்களாதேஷ் நாட்டிற்குச் சென்றுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.

சிவப்புக் கம்பளம் விரித்து மேக்ரானுக்கு வரவேற்பளித்துள்ளது பங்களாதேஷ் நாடு. ஹஸ்ரத் ஷாஜஹால் சர்வதேச விமான நிலையத்தில் மேக்ரானை வரவேற்றார் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் இணைந்து மேக்ரானுக்கு கௌரவம் செலுத்தி அவரை வரவேற்றனர். 21 குண்டுகள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிகப்பட்டது.

இருதரப்பு ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குப் பின் தலைவர்கள் இணைந்து ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளிக்க உள்ளனர்.

1990ஆம் ஆண்டு, பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த Francois Mitterrandஇன் வருகைக்குப் பிறகு, 33 ஆண்டுகளுக்குப் பின் பங்களாதேஷுக்கு வருகை தரும் இரண்டாவது பிரான்ஸ் நாட்டுத் தலைவர் மேக்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...