உலகம்செய்திகள்

முதன்முறையாக நாடொன்றிற்குச் செல்லும் ஜனாதிபதி

Share

முதன்முறையாக நாடொன்றிற்குச் செல்லும் ஜனாதிபதி

இந்தியாவில் G 20 உச்சி மாநாட்டில் பங்கேற்றபின், பங்களாதேஷ் நாட்டிற்குச் செல்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி.

உச்சி மாநாடுகள், தங்களுக்கு இலக்கு வகுக்கப்பட்ட நோக்கத்துடன் முடிந்துவிடுவதில்லை. அவை மேலும் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வளர்க்க, வலுப்படுத்த உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

அதற்கு நல்லதோர் உதாரணமாக அமைந்துள்ளது, பிரான்ஸ் ஜனாதிபதியின் பங்களாதேஷ் பயணம். ஆம், இந்தியாவில் G 20 உச்சி மாநாடு முடிந்ததும், பங்களாதேஷ் நாட்டிற்குச் சென்றுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.

சிவப்புக் கம்பளம் விரித்து மேக்ரானுக்கு வரவேற்பளித்துள்ளது பங்களாதேஷ் நாடு. ஹஸ்ரத் ஷாஜஹால் சர்வதேச விமான நிலையத்தில் மேக்ரானை வரவேற்றார் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் இணைந்து மேக்ரானுக்கு கௌரவம் செலுத்தி அவரை வரவேற்றனர். 21 குண்டுகள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிகப்பட்டது.

இருதரப்பு ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குப் பின் தலைவர்கள் இணைந்து ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளிக்க உள்ளனர்.

1990ஆம் ஆண்டு, பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த Francois Mitterrandஇன் வருகைக்குப் பிறகு, 33 ஆண்டுகளுக்குப் பின் பங்களாதேஷுக்கு வருகை தரும் இரண்டாவது பிரான்ஸ் நாட்டுத் தலைவர் மேக்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...