rtjy 110 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அமைச்சரவையில் சிறிய மாற்றம்

Share

இலங்கை அமைச்சரவையில் சிறிய மாற்றம்

இலங்கையின் அமைச்சரவையில் சிறிய மாற்றம் ஒன்று விரைவில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக்காலமாக அமைச்சர்கள் சிலருக்கும் ராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கும் இடையில் இடம்பெற்ற திணைக்களப் பொறுப்பு இழுபறி மற்றும் வசதிகள் குறித்து பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இந்த மாற்றம் நிகழவுள்ளதாக அரசாங்க தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக இந்த பிரச்சினைகள் குறித்து கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமைச்சுக்களின் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் அமைச்சரவை அலுவலகம் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் மே 17 முதல் ஆகஸ்ட் 26 வரை பெரிய அளவிலான தரவுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அலுவலகம் உட்பட, மின்னஞ்சல் டொமைனைப் பயன்படுத்தும் அனைத்து அரசாங்க அலுவலகங்களும், பாரிய வைரஸ் தாக்குதலுக்குப் பின்னர், 2023 மே 17 முதல் ஆகஸ்ட் 26 வரையிலான தரவுகளை இழந்துள்ளதாக, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ஐசிடீஏ உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதல்; சுமார் 5,000 மின்னஞ்சல் முகவரிகளை பாதித்திருக்கலாம் என்று ஐஊவுயு நிறுவன மேலாளர் மகேஸ் பெரேரா கூறியுள்ளார்.

சுமார் இரண்டரை மாத மதிப்புள்ள தரவுகளுக்கு ஓஃப்லைன் காப்புப்பிரதி )எதுவும் இல்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டதுடன், ஒன்லைன் காப்பு பிரதிகளும் சிதைந்து விட்டன என்று அவர் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தொலைந்து போன தரவுகளை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறது என்று பெரேரா கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...