ஏனையவைசினிமாசெய்திகள்

பரபரப்பை கிளப்பிய விஜயலட்சுமி புகார்!

Share

பரபரப்பை கிளப்பிய விஜயலட்சுமி புகார்!

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் ஒன்றை அளித்தார்.

அதில், சீமான் திருமணம் செய்வதாக கூறி காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், கணவன்- மனைவி போல் குடும்பம் நடத்திவிட்டு தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தன்னிடம் பணம், நகையை பறித்து மோசடி செய்ததாகவும், 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தீவிரமான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பல்வேறு விசாரணைக்கு பின்னர் மகப்பேறு மருத்துவர்கள் சோதனை நடத்தினர்.

விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்த போது கையெழுத்து போட்டது யார்? என்று விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து விசாரணை நடத்த ஆஜராகும்படி சீமானுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இன்று காலை 10:30 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பள உயர்வால் மகிழ்ச்சி: ஹப்புத்தளை தோட்டத் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்துக் கொண்டாட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்காக, அரசாங்கத்திற்குத் தமது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வகையில் ஹப்புத்தளை...

20
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணையை அரசியலாக்க வேண்டாம்: சுரேஷ் சலே கைது குறித்து கத்தோலிக்க திருச்சபை விசேட அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் சுரேஷ்...

18
செய்திகள்இந்தியா

இந்தியப் பயணிகளை ஈர்க்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிரடித் திட்டம்: வாராந்திர விமானங்கள் அதிகரிப்பு மற்றும் புதிய நகரங்களுக்கு சேவை!

டெல்லியில் நடைபெற்று வரும் SATTE 2026 சுற்றுலா கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,...