kamadenu 2023 09 732ef9ab a02c 458d 8830
உலகம்செய்திகள்

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 820 ஆக உயர்வு!

Share

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 820 ஆக உயர்வு!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தினால் மாரகெச் நகர் அதிகமாக பாதிக்கப்பட்டது.

வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.

முதற்கட்டமாக 296 பேர் பலியானதாகவும், 153 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் 672 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் துரித கதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. ரபாத் நகரில் 1,000 கூடாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...