vikatan 2020 09 9a098bc1 057c 44c8 9925 dfde17dde293 158542 thumb
இந்தியாசெய்திகள்

உதயநிதியை மிரட்டிய சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி

Share

உதயநிதியை மிரட்டிய சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவேன் என்ற சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி தருவேன் என நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சீமான் சென்னையில் தனது தொண்டர்களுடன் கிருஷ்ன ஜெயந்தி விழாவை கொண்டாடினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர்,”உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி பேசியது தவறில்லை. அவர் பேசிய கருத்துடன் தான் மோத வேண்டும். அது தான் ஜனநாயகம். அதை விட்டு, தலையை வெட்டுவேன் என்று கூறுவது முறையல்ல. அவர், எறிந்த பந்தை வைத்து பாஜக விளையாடுகிறார்கள்” என்றார்.

மேலும் அவர், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவேன் என்று சொன்ன சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி நான் தருகிறேன். தலையை வெட்டுவேன் என்று கூறுபவர்கள் சாமியார் அல்ல, கசாப்புக்கடைக்காரர்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய சீமான், “மனித பிறப்பில் பாகுபாடு பார்ப்பவர்களை நான் எதிரியாக கருதுகிறேன். அந்த வகையில், சனாதனத்தை எதிர்க்கிறேன். டெங்கு நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை உதயநிதி ஒழிக்க வேண்டும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றால் கர்நாடகாவில் இருந்து தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்காமல் இருப்பது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...