3 17 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் பெண்ணையும் இளைஞரையும் வாளால் தாக்கிவிட்டி தப்பியோடிய மர்ம நபர்

Share

கனடாவில் பெண்ணையும் இளைஞரையும் வாளால் தாக்கிவிட்டி தப்பியோடிய மர்ம நபர்

கனேடிய மாகாணமொன்றில் இரண்டு பேரை வாளால் தாக்கிவிட்டு மர்ம நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், பொலிசார் அவரை வலைவீசித் தேடிவருகிறார்கள்.

கனடாவின் Prince Edward Island மாகாணத்தில், கடற்கரைக்குச் சென்றிருந்த ஒரு பெண்ணும், இளைஞர் ஒருவரும் மர்ம நபர் ஒருவரால் வாளால் தாக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண் பலத்த காயமடைந்துள்ளார் என்றாலும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞருக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளன. அவர்களுடன் இருந்த மூன்றாவது நபர் தாக்குதலிலிருந்து தப்பிவிட்டார்.

அந்தப் பெண்ணையும் இளைஞரையும் தாக்கிய நபர் இன்னமும் வெளியில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ள பொலிசார், அந்த சம்பவம் தொடர்பாக தாங்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

அவரால் இப்போதைக்கு பொதுமக்களுக்கு அபாயம் இல்லை என்று கூறியுள்ள பொலிசார், என்றாலும், மக்கள் கதவுகளை மூடிக்கொண்டு பத்திரமாக வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Share
தொடர்புடையது
image 1000x1000 3 1
செய்திகள்இலங்கை

பாடசாலை செல்லாத கோபம்: மாணவியைத் தாக்கிய அதிபர் மீது காவல்துறை விசாரணை

ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரைத் தடியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிபர்...

image 1000x1000 2
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் – பேராசிரியர் கடும் விமர்சனம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா...

image 1000x1000 1
செய்திகள்இலங்கை

கோர விபத்து: அநுராதபுரத்தில் யாழ் பெண் உட்பட இருவர் பலி, 8 பேர் காயம்

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தின்...

image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...