23 64f499d26d791
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் குடியேற காத்திருக்கும் 8 லட்சம் மக்கள்

Share

அமெரிக்காவில் குடியேற காத்திருக்கும் 8 லட்சம் மக்கள்

தாலிபான்கள் ஆட்சிக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற 8 லட்சம் ஆப்கானியர்கள் காத்து இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு தாலிபான்கள் கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது.

தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அவர்கள் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அடுக்கடுக்காக விதித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கான கல்வி உரிமை மறுப்பு, வேலை வாய்ப்பு மறுப்பு மற்றும் ஆடை கட்டுப்பாடு போன்றவற்றை தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.

தாலிபான்கள் உடனான போர் தொடங்கிய பிறகு அமெரிக்க படைகளுக்கு உதவிய நபர்களுக்கு அமெரிக்காவில் குடியேற 2009ம் ஆண்டு சிறப்பு விசா வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

துபாய் செல்லும் 100 மாணவிகளை தடுத்து நிறுத்திய தாலிபான்கள்
தாலிபான் தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் அமெரிக்காவில் குடியேற தீவிரமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைப்படி, சுமார் 8 லட்சத்து 40 ஆயிரம் ஆப்கானியர்கள் அமெரிக்காவில் குடியேற விண்ணப்பித்து சிறப்பு விசாவை பெற காத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...