tamilni 418 scaled
இலங்கைசெய்திகள்

பெண்கணை அச்சுறுத்தி கொள்ளையடிக்கும் கும்பல்

Share

பெண்கணை அச்சுறுத்தி கொள்ளையடிக்கும் கும்பல்

புத்தளத்தில் பெண்கணை அச்சுறுத்தி கொள்ளையடிக்கும் கும்பலை தேடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனாத்தவில்லு பிரதேசத்தில் பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையிட்ட கும்பலை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த 30ஆம் திகதி வனாத்தவில்லுவ – 06 ஆம் மைல்கல் பிரதேசத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வனாத்தவில்லுவ – ஸ்மைல்புரம், மாரசிங்க பெடிகே பகுதியைச் சேர்ந்த சுஜீவ தீபானி செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தான் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகவும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தனது மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி, கைத்துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் காட்டி மிரட்டி தங்க சங்கிலி மற்றும் பதக்கத்தை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்கள் யாரென அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர்களுடன் தொடர்புடைய மேலும் பலர் இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...