tamilni 412 scaled
இலங்கைசெய்திகள்

உறவுகள் வடிக்கும் கண்ணீரை எவரும் கொச்சைப்படுத்த முடியாது: அமைச்சர் விஜயதாஸ

Share

உறவுகள் வடிக்கும் கண்ணீரை எவரும் கொச்சைப்படுத்த முடியாது: அமைச்சர் விஜயதாஸ

“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலியும் வேதனையும் அரசுக்குத் தெரியும். கொடூர வேதனையில் துடிக்கும் அந்த உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.” என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று நீதி கோரி வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

“நீதி அமைச்சர் என்ற ரீதியில் எனது கருத்தை நான் முன்வைத்துளேன்.

தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவினத்திலும் பலர் காணாமல்போயுள்ளனர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

அந்த உறவுகள் வடிக்கும் கண்ணீரை எந்தத் தரப்பும் கொச்சைப்படுத்த முடியாது.

அவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? இந்தக் கேள்விக்கு இலங்கை அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். பொறுப்புக்கூறும் இந்த விடயத்தில் இருந்து இலங்கை அரசு தப்பிக்கவே முடியாது என இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகம், இலங்கை அரசை சும்மாவிடாது.”

“இறுதிப் போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? இராணுவத்தினரிடம் உயிருடன் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? வடக்கிலும் கிழக்கிலும் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?

கைது செய்யப்பட்டு பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? இந்தக் கேள்விகளுக்கு இலங்கை அரசு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்க நாம் தொடர்ந்தும் போராடுவோம்.” என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...