5 13 scaled
உலகம்செய்திகள்

இளம் வயதில் மலை ஏறி சாதனை படைக்கும் சிறுமி

Share

இளம் வயதில் மலை ஏறி சாதனை படைக்கும் சிறுமி

இந்திய மாநிலம், பஞ்சாபை சேர்ந்த சிறுமி ஒருவர் இளம்வயதில் தொடர்ந்து மலை ஏறி சாதனை படைத்து வருகிறார்.

பல விளையாட்டுகளுக்கு மத்தியில் சிலர் மட்டுமே மற்ற செயல்கள் மூலம் தனித்துவம் பெறுவார்கள். அந்தவகையில், மலையேறுவதில் தனித்துவம் பெற்றவர் தான் இந்த சிறுமி.

பஞ்சாப் மாநிலம் ரூப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் சூத். இவரது மகள், சான்வி என்ற சிறுமி தான் மலை ஏறுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.

சமீபத்தில், ரஷியாவில் 5,642 மீட்டர் உயரத்தில் உள்ள எல்பரஸ் சிகரத்தில் சிறுமி சான்வி ஏறினார். இதனால், இளம் வயதில் எல்பரஸ் சிகரத்தை ஏறிய சிறுமி என்ற சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு, எவரெஸ்ட் மலை சிகரத்திலும் ஏறி இந்தியக் கொடியை அசைத்துள்ளார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் இளம் வயதில் ஏறிய சிறுமி என்ற சாதனையும் படைத்திருந்தார்.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தென்னாப்பிரிக்காவில் உள்ள 5,895 மீட்டர் உயரத்தில் உள்ள கிளிமாஞ்சாரோ சிகரத்திலும், கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவில் 2,228 மீட்டர் உயரம் உள்ள கோஸ்சியூஸ்கோ சிகரத்திலும் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இளம் வயதில் மலை ஏறி சாதனை படைக்கும் சான்விக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதனிடையே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சான்வியின் சிறந்த பங்களிப்பிற்காக சுதந்திர தினத்தன்று மாநில விருது வழங்கி கௌரவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...