tamilni 369 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இரு புதிய வங்கிகள்

Share

இலங்கையில் இரு புதிய வங்கிகள்

அரச மற்றும் தனியார் பங்காளித்துவத்துடன் இலங்கையில் இரு வங்கிகளை அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார்.

பொரளையில் நேற்றுமுன் தினம் (26.08.2023) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், முதலீட்டு வங்கி ஒன்றையும் அபிவிருத்தி வங்கி ஒன்றையும் அமைக்க வேண்டும்.

பெரிய, சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் நலன்களுக்கு சேவை செய்யும் இந்த இரண்டு வங்கிகளிலும் அரச மற்றும் தனியார் துறை இரண்டும் பங்குகளை வைத்திருக்க முடியும்.

மாறிவரும் உலகின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இவை அமைக்கப்பட வேண்டும். இந்த வங்கிகள் மூலம் நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன்களை அபிவிருத்தி வங்கி வழங்க முடியும்.

அதே நேரத்தில் முதலீட்டு வங்கி வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் இலங்கை தொழில்முனைவோருக்கு உதவ முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...