rtjy 247 scaled
இலங்கைசெய்திகள்

கனடா செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்கவில் கைது

Share

கனடா செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்கவில் கைது

இலங்கை கடவுச்சீட்டில் போலி கனேடிய வீசா மூலம் நாட்டை விட்டு வெளியேற முயன்ற நபரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் புதன்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியது.

42 வயதான அந்த நபர் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL225 விமானத்தில் பயணம் செய்ய முயன்றுள்ளார்.

இதன் போது விமான ஊழியர்கள் அவரது கனேடிய விசா குறித்து சந்தேகம் அடைந்து அவரை தடுத்து நிறுத்தி சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

பின்னர் அவர் கட்டுநாயக்க விமான நிலைய எல்லை கண்காணிப்பு பிரிவில் குடிவரவுத் துறையின் சிறப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அதிகாரிகள் அவரது இலங்கை கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட கனேடிய விசா போலியானது என்பதைக் கண்டறிந்தனர்.

இந்த நிலையில் பயணியின் இலங்கை கடவுச்சீட்டு உண்மையானது எனவும் அவர் வத்தளையில் உள்ள ஒரு நபரிடம் இருந்து 4.5 மில்லியன் ரூபாய்க்கு போலி கனேடிய விசாவைப் பெற்றுள்ளார் எனவும் சிரேஷ்ட குடிவரவு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் முதலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டுபாய் சென்று பின்னர் வேறு விமானத்தில் கனடா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு போலி பயண ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமான முறையில் கனடா, இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்ல 10 க்கும் மேற்பட்ட நபர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பட்டியலை இந்த கைதும் சேர்க்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....