6 14 scaled
உலகம்செய்திகள்

மன்னர் சார்லசுடைய ஆட்டுக்குட்டிகளைத் திருடிய மூன்று பெண்கள்!

Share

மன்னர் சார்லசுடைய ஆட்டுக்குட்டிகளைத் திருடிய மூன்று பெண்கள்!

மன்னர் சார்லசுக்கு சொந்தமான எஸ்டேட் ஒன்றிலிருந்து ஆட்டுக்குட்டிகளைத் திருடியதாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

உண்மையில், Animal Rising என்னும் போராட்டக் குழுவே இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், மூன்று பெண்கள் வயல் ஒன்றில் வழியாக நடந்து சென்று, மூன்று ஆட்டுக்குட்டிகளைப் பிடித்து வாகனம் ஒன்றில் ஏற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், கால்நடைகள் வைத்திருக்கும் யாராக இருந்தாலும், அவற்றை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு வாகனத்தில் கொண்டு செல்லும்போது, அது குறித்து பதிவேடு ஒன்றில் பதிவு செய்தாகவேண்டும் என்பது விதி.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள், அடுத்த மாதம் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...

world 98
செய்திகள்உலகம்

ஹைட்டியில் சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய...

world 97
செய்திகள்உலகம்

ஈரான் இனி பழைய ஈரான் அல்ல: அணுசக்தி திட்டங்களை முறியடித்துவிட்டதாக நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “வரலாற்றுச் சாதனைகளை” படைத்துள்ளதாகவும், அதன் அணுசக்தி லட்சியங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலியப்...

world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...